இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 35 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் தடுப்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் நாடு முழுவதும் 1993 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா:
இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,043 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 1,147 பேர் கொரோனவால் உயிரிழந்து உள்ளனர். 8,889 பேர் வைரஸ் தாக்கத்தில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 25,007 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் தான் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மேலும் இதுவரை 459 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில வாரியாக பாதிப்பு விபரம்:
- மஹாராஷ்டிரா – 10,498 பேர்
- குஜராத் – 4395 பேர்
- டில்லி – 3,515 பேர்
- மத்தியப்பிரதேசம் – 2,660 பேர்
- ராஜஸ்தான் – 2,584 பேர்
- தமிழகம் – 2,323 பேர்
- உத்தர பிரதேசம் – 2,134 பேர்
- ஆந்திரா – 1,403 பேர்
- தெலுங்கானா – 1,038 பேர்
- மேற்கு வங்கம் – 795 பேர்
- காஷ்மீர் – 614 பேர்
- கர்நாடகா – 565 பேர்
- கேரளா – 497 பேர்
- பீஹார் – 418 – 02
- பஞ்சாப் – 357 பேர்
- ஹரியானா – 313 பேர்
- ஒடிசா – 142 பேர்
- ஜார்க்கண்ட் – 107 பேர்
- சண்டிகர் – 56 பேர்
- அசாம் – 42 பேர்
- ஹிமாச்சல பிரதேசம் – 40 பேர்
- சத்தீஸ்கர் – 40 பேர்
- அந்தமான் – 33 பேர்
- லடாக் – 22 பேர்
- மேகாலயா- 12 பேர்
- புதுச்சேரி- 09 பேர்
- கோவா- 07 பேர்
- திரிபுரா- 02 பேர்
- மணிப்பூர் – 02 பேர்
- அருணாச்சல பிரதேசம் – 01 பேர்
- மிசோரம் – 01 பேர்
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |