இந்த உலகம் இயங்க நாள்தோறும் இடைவிடாமல் உழைக்கும் உழைப்பாளர்களை போற்றும் வகையில் இந்த மே தினம் கொண்டாடப்படுகிறது. கொரோனவால் உலகமே முடங்கி உள்ள நிலையில் அனைவரின் உயிரையும் காப்பாற்ற தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், அரசு மற்றும் தனியார் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் என அனைவரையும் போற்ற வார்த்தைகள் போதாது.
அவர்களுக்கு நாம் செய்யும் ஒரே உதவி அரசின் ஊரடங்கு உத்தரவை மதித்து வீட்டில் இருப்பது தான். இந்த ஊரடங்கிலும் வீட்டில் இருப்பவர்களுடன் நேரத்தை செலவிட முடியாமல் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு சேர்க்க பாடுபடும் உழைப்பாளிகளுக்கும், வீட்டிலிருந்த படி வேலை செய்யும் ஐடி ஊழியர்களுக்கும் மே தின வாழ்த்துக்கள்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |