இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரு அணி வீரர்களும் சேர்ந்து பல்வேறு உலக சாதனைகளை படைத்துள்ளனர்.
நியூஸிலாந்தை பந்தாடிய இந்தியா – கேஎல் ராகுல், ஷ்ரேயஸ் அய்யர் அமர்க்களம்
இதுவே முதல்முறை…!
- ஒரே டி20 போட்டியில் ஐந்து பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும். இப்போட்டியில் நியூஸிலாந்து சார்பில் கோலின் முன்ரோ (59), கேன் வில்லியம்சன் (51), ராஸ் டெய்லர் (54) ஆகியோரும், இந்தியாவின் கே. எல் ராகுல் (56) மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் (58) ஆகியோரும் அரைசதம் கடந்தனர்.
- சர்வதேச டி-20 கிரிக்கெட்டில் அதிக முறை 200 ரன்களுக்கு மேல் ரன்களை வெற்றிகமாக இந்திய அணி நான்காவது முறையாக எட்டியது. ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் தலா இரண்டு முறை இச்சாதனையை படைத்துள்ளனர்.
- இரண்டாவதாக களமிறங்கி 200 ரன்களுக்கு அடித்த அணிக்கான சாதனையிலும் இந்தியா(8 முறை) முதலிடத்தில் உள்ளது. இதில் இங்கிலாந்து (4 முறை) இரண்டாவது இடத்திலும், ஆஸ்திரேலியா (3 முறை ) மூன்றாவது இடத்திலும் உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |