நியூஸிலாந்தை பந்தாடிய இந்தியா – கேஎல் ராகுல், ஷ்ரேயஸ் அய்யர் அமர்க்களம்

0
India

இந்தியா நியூஸிலாந்து இடையிலான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக காலின் முன்ரோ 59 ரன்கள், வில்லியம்சன் 51 ரன்கள், ராஸ் டெய்லர் 54 ரன்களும் அடித்திருந்தனர். இந்திய அணியின் பவுலிங்கில் சமியை தவிர அனைவரும் தலா 1 விக்கெட் எடுத்திருந்தனர்.

பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடி 56 ரன்கள், கேப்டன் விராட் கோஹ்லி 45 ரன்கள், ஷ்ரேயஸ் அய்யர் 58 ரன்களும் குவித்து வெற்றிக்கு வித்திட்டனர். இந்திய அணி 19 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட இத்தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here