சிட்னியில் 3 நாட்கள் கொண்ட ஆட்டத்தில் இந்திய – ஆஸ்திரேலியா ஏ அணிகள் விளையாடி வருகின்றன. மூன்று நாள் டெஸ்ட் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 39 ரன்கள் முன்னிலையில் உள்ளது.
மூன்று நாள் பயிற்சி ஆட்டம்:
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி 20 ஆகிய தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா ஏ அணிக்கான மூன்று நாள் டெஸ்ட் தொடர் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 2-ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே ஆட்டமிழக்காமல் 117 ரன்களை எடுத்தார். ஆஸ்திரேலியா அணியின் கேமரூன் கிரீன் ஆட்டமிழக்காமல் 114 ரன்களை அடித்துள்ளார்.
தமிழக அரசு ஊழியர்களின் சம்பள குறைப்பு!!
இந்தியாவின் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டும் முகமது சிராஜ் 2 விக்கெட்டையும் கைப்பற்றினர். சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்திய ஏ அணியின் முதல் இன்னிங்ஸை விட ஆஸ்திரேலிய ஏ அணி 39 ரன்கள் அதிகம் பெற்று முன்னிலையில் இருக்கிறது.