சர்வதேச இந்திய அணியானது, ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசனில் தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. உலக அளவில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக, ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதில், ரோஹித் சர்மா வந்த வேகத்தில் பவுண்டரி ஒன்றை விளாசி தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சற்று வேகம் காட்ட தொடங்கிய நிலையில், மழை குறுக்கிட்டு தற்காலிகமாக ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அணி 4.2 ஓவரில் 15 ரன்கள் எடுத்துள்ளது. இதில், ரோஹித் சர்மா 11*, சுப்மன் கில் 0 ரன்கள் எடுத்துள்ளனர்.