இந்தியா vs நியூசிலாந்து அணிகளுக்கான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 2-0 என தொடரை கைப்பற்றியது. இதனால் ஒருநாள் போட்டி தரவரிசையில் நியூசிலாந்து அணியை பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்திற்கு இந்திய அணி முன்னேறியது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மேலும் இந்த தொடரின் 2வது போட்டியில் சீனியர் வீரர் முகமது ஷமி 6 ஓவர்களை வீசி 18 ரன் விட்டுக்கொடுத்து, 3 விக்கெட்டுகளை கைப்பற்றி சூப்பர் கம்பேக் கொடுத்திருந்தார். இதனால் நியூசிலாந்து அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து பங்களாதேஷ், இலங்கை அணிகளுக்கு எதிராக அதிவேகமாக பந்து வீசிய உம்ரான் மாலிக்கு முகமது ஷமி சில அறிவுரைகளை கூறியுள்ளார்.
ஐசிசியின் உயர்ந்த இடத்தை எதிர்நோக்கி இந்தியா…, நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியால் நிகழுமா??
அதாவது, “போட்டியின் கடினமான சூழ்நிலையில் பதட்டப்படாமல் நம்பிக்கையுடன் பந்துவீச வேண்டும். மேலும் அதிவேகமாக பந்து வீசுகையில் பிட்ச் தன்மையை புரிந்து துல்லியமாக லைனில் வீசினால் தலைசிறந்த பவுலராக திகழலாம்.” என முகமது ஷமி தெரிவித்துள்ளார்.