இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி அஹமதாபாத் மைதானத்தில் வைத்து நடக்கவுள்ளது. தற்போது இந்த போட்டிக்கான அனைத்து டிக்கட்டுகளும் விற்பனை ஆகியுள்ளதாம்.
இந்தியா vs இங்கிலாந்து:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த இங்கிலாந்து அணி தற்போது முதல் கட்டமாக டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையே இரண்டு டெஸ்ட் போட்டி நடந்து முடிந்தது. இதில் இரு அணிகளும் தலா 1 முறை வென்றுள்ளனர். தற்போது இந்த அணிகளுக்கான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 24ம் தேதியுடன் தொடங்குகிறது. மேலும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மற்றும் 5 டி 20 போட்டிகளும் இதே அஹமதாபாத் மைதானத்தில் வைத்து தான் நடைபெறவுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் மைதானத்திற்கு 50 சதவீத ரசிகர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அதற்கான டிக்கட்டை ரசிகர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து பெறலாம் என்று முன்பே அறிவித்தனர். தற்போது அஹமதாபாத் மைதானத்தில் நடக்கவிருக்கும் டெஸ்ட் மற்றும் டி 20 போட்டிகளுக்கான டிக்கட் விற்பனை தொடங்கியது. தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கட் அனைத்தும் மிக வேகமாக விற்பனை செய்துள்ளதாம். இதனை பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் – தலைமை தேர்தல் அதிகாரி நாளை ஆலோசனை!!
மேலும் அவர் கூறியதாவது, நான் ஜெய் ஷா உடன் பேசினேன். அகமதாபாத்தில் பல ஆண்டுகளுக்கு பின்பு போட்டிகள் நடைபெறுகிறது. அதற்கு காரணம் அங்கு தற்போது கட்டப்பட்டுள்ள புதிய மைதானம் தான். இந்த மைதானம் மிக பெரியது. மேலும் ஸ்டாண்டுகளில் உட்கார்ந்து போட்டியை காண்பதற்கான அனைத்து டிக்கட்டும் தற்போது விற்பனை செய்துள்ளது. மேலும் இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெறும். இது ஒரு வரலாறாக அமையும் என்று கூறினார். மேலும் டெஸ்ட் போட்டி மட்டுமல்லாமல் டி 20 போட்டிக்கான அனைத்து டிக்கட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் கங்குலி.