தற்போது புதுச்சேரியில் ஆளுநர் பதவியில் இருந்து கிரண் பேடியை தூக்கப்பட்ட நிலையில் தெலுங்கானா ஆளுநர் கூடுதல் பொறுப்பாக நாளை புதுச்சேரி ஆளுநராக பதவி ஏற்க உள்ளார்.
புதுச்சேரி:
கடந்த 2016ம் ஆண்டு முதல் புதுச்சேரி ஆளுநராக கிரண் பேடி திகழ்ந்து வந்தார். இவர் பதவியில் இருந்த காலத்தில் ஆணையர்கள் அனைவரையும் திடிரென்று தனது மாளிகைக்கு வரவைத்து ஆலோசனை நடத்துவார். இவர் அந்த பகுதியில் தனி அரசியலை நடத்தி வந்தார். இதனால் புதுச்சேரி முதல்வருக்கும் கிரண் பேடிக்கும் இடையே பல பிரச்சனைகள் நிலவியது. மேலும் கிரண் பேடி மக்களுக்கு வழங்கப்படும் பல நல்ல திட்டங்களுக்கு எதிராக இருந்து வந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தொடர்ந்து பல பிரதச்சனைகள் நீடித்து வந்த நிலையில் இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை விடுத்தனர். மேலும் முதல்வர் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று நாட்டின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அதிரடியாக கிரண் பேடியை பதவியில் இருந்து விளக்கினார்.
ட்விட்டர் தளத்தில் புதிய அப்டேட் – இந்தியாவில் தொடங்கும் சோதனை!!
இதனால் புதுச்சேரியில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது புதுச்சேரி ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை நியமிக்க அரசு முடிவு செய்தது. அவருக்கு கூடுதல் பொறுப்பாக புதுச்சேரி ஆளுநர் பதவியை கொடுக்க உள்ளனர். இதனை தொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன் நாளை காலை 9 மணி அளவில் புதுச்சேரி ஆளுநராக பதவி ஏற்க உள்ளார்.