தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை ஒட்டி, நாளை பிப்ரவரி 18ம் தேதி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுக கட்சியின் ஆட்சிக்காலம் வரும் மே மாதம் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த ஆட்சிக்கான தேர்வுகள் வரும் ஏப்ரல் மாத துவக்கத்தில் அல்லது மே மாதத்தில் நடைபெறவுள்ளது. அதற்காக தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் புதிய கோரிக்கைகளுடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். முன்னதாக தமிழகத்தில் நடைபெறப்போகும் சட்டமன்ற தேர்தல் குறித்து ஆய்வு செய்ய, கடந்த வாரத்தில் இரண்டு நாட்கள் இந்திய தேர்தல் ஆணையர் சுனில் அரோரா சென்னைக்கு வருகை புரிந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தமிழகத்தில் இடிமின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!!
அவர் நடத்திய ஆலோசனையில் தமிழக சட்டமன்ற தேர்தலை வன்முறையின்றி நடத்தி தரும்படி அவர் கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரத சாகு நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தேர்தல் அதிகாரி நடத்தும் ஆலோசனைக்கூட்டம் காணொளி மூலமாக நடைபெறவுள்ளது.