தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு வானிலை நிலவரம் எப்படி இருக்கும் என்பது குறித்து வானிலை மையம் தற்போது தகவல் அளித்துள்ளது. மேலும் மீனவர்களுக்கும் கடலுக்கு செல்ல எச்சரிக்கை எதுவும் உள்ளதா என்பது பற்றிய தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.
வானிலை நிலவரம்:
17.02.2021 முதல் வரும் 18.02.2021ம் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். மேலும் வருகிற 19.02.2021ம் தேதி அன்று தமிழகத்தில் கடலோர மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். ஏனைய மாவட்டத்தில் வறண்ட வானிலையே காணப்படும். மேலும் வரும் 20.02.2021 மற்றும் 21.02.2021 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
‘பிளஸ் 2 தேர்வு அட்டவணையில் குழப்பம் இல்லை’ – செங்கோட்டையன் பேட்டி!!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் வெப்பநிலை அதிகபட்சமாக 31 மற்றும் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எந்த பகுதியிலும் மழை பதிவாகவில்லை. மேலும் கடலுக்கு செல்வதற்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.