‘பிளஸ் 2 தேர்வு அட்டவணையில் குழப்பம் இல்லை’ – செங்கோட்டையன் பேட்டி!!

0

தற்போது கோபியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது, பிளஸ் 2 பொது தேர்வு அட்டவணையில் எந்த குழப்பமும் இல்லை என்று கூறியுள்ளார்.

பிளஸ் 2:

தற்போது ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிப்பகுதியில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான உள் விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. இதனை தமிழக கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று திறந்து வைத்தார். திறப்பு விழாவுக்கு பின்பு செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, எங்கள் குழு முன்னதாகவே பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான அட்டவணையை சரியான முறையில் அமைத்து வைத்தது. இந்நிலையில் நேற்று தமிழக முதலமைச்சரிடம் பொதுத்தேர்வு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தினோம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஏற்கனவே சிபிஎஸ்சி பள்ளிகளுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான அட்டவனை வெளியாகியது. ஆனால் நாங்கள் தமிழகத்தில் வரப்போகும் சட்டமன்றம் தேர்தலின் தேதி குறித்து தான் இதனை வெளியிடுவதற்கு தாமதம் செய்தோம். ஆனால் தற்போது பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையில் எந்த குழப்பம் மற்றும் மாற்றம் இல்லை என்று தெரிவித்தார்.

‘அனிருத்,கீர்த்தி சுரேஷ் இடையே காதல் கிடையாது’ – கடுப்பான கீர்த்தியின் அப்பா!!

மேலும் திறனாய்வு தேர்வுக்கான கட்டணத்தை தமிழக அரசு செலுத்துவது குறித்து வரும் 23ம் தேதி அன்று தமிழக முதலமைச்சருடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளோம். மேலும் தமிழ்நாட்டில் உள்ள நூலகங்களில் உள்ள அனைத்து காலிப்பணி இடங்களையும் தற்காலிமாக நிரப்புவதற்கான பணிகள் நடந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here