தற்போது நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை அரசு குறைத்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
மேகலயா:
நாட்டில் கடந்த சில தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் இந்தியாவில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100 ஐ தாண்டி புதிய உச்சத்தை தொட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் கடந்த கொரோனா காலத்தில் அனைத்து மாநிலமும் நிதி நெருக்கடியால் அவதிப்பட்டது. இதனை சரி செய்யும் வகையில் பெட்ரோல் மற்றும் டீசலின் மீதான வாட் வரியை அதிகரித்தனர். தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க மேகலாய அரசு ஓர் திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதுகுறித்து அந்த மாநிலத்தின் முதலமைச்சர் கான்ராட் சங்மா கூறியதாவது, நாட்டில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தற்போது இதனை தடுக்கும் வகையில் கொரோனா காலத்தில் அதிகமாக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசலின் மீதான வாட் வரியை தற்போது குறைக்க முடிவெடுத்துள்ளோம். இதன்படி பெட்ரோலுக்கு 31.62 சதவீதமாகவும் மற்றும் டீசலுக்கு 20 சதவீதமாகவும் வரி குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் சட்டமன்ற தேர்தல்?? மும்முரமாகும் பணிகள்!!
இதன்மூலம் தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.91.26ல் இருந்து ரூ.85.86 ஆக குறையும். அதேபோல் டீசல் லிட்டருக்கு ரூ.84.23 இருந்து ரூ.79.13 ஆக குறையும். இதனால் வாகன ஓட்டிகள் தற்போது சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் இதேபோல் ஏற்கனவே அசாம் மாநிலத்தில் விலை குறைக்கப்பட்டது. அங்கேயும் இதேபோல் கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட வாட் வரியை தற்போது குறைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.