பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகரான கார்த்திக் ராஜ் சமூகவலைதளங்களில் தனது பெயரில் இருக்கும் போலியான கணக்குகளை பின்தொடர வேண்டாம் என ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நடிகர் கார்த்திக் ராஜ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கானா காணும் காலங்கள்’ என்ற தொடரின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். தொடர்ந்து இவர் நடித்த ‘ஆபீஸ்’ என்ற தொடரின் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள். வெள்ளித்திரையில் ‘465’ மற்றும் ‘நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல’ என்ற திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார் கார்த்திக் ராஜ்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இவரைப்பற்றி பல்வேறு நேர்மறையான விஷயங்கள் பேசப்படுகின்ற போதிலும் நெகட்டிவ் கருத்துக்கள் அதிகமாக வந்துகொண்டு இருக்கிறது. கார்த்திக் ராஜ் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலில் நடித்து வந்தார். இதில் இவர் ஏற்று நடித்த ஆதி என்ற கதாப்பாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக நடிகை ஷபானா ஷாஜகான் நடித்து வந்தார். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக சமூகவலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதைப்பற்றி இவர்கள் இருவருமே எந்த கருத்தும் தெரிவித்ததில்லை. நடிகை ரம்யா பாண்டியனுடன் கார்த்திக் ராஜ் நடிப்பில் ‘முகிலன்’ என்ற வெப் தொடர் கடந்த சில மாதங்களுக்கு முன்னாக வெளியானது.
தமிழகத்தில் ஏப்ரல் இறுதியில் சட்டமன்ற தேர்தல்?? மும்முரமாகும் பணிகள்!!
இதைத்தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார் கார்த்திக். இதனால் இவர் நடித்து வந்த செம்பருத்தி தொடரிலிருந்து விலகினார். தற்போது கார்த்திக் நடித்து வந்த ஆதி என்ற கதாப்பாத்திரத்தில் விஜே அக்னி நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் கார்த்திக் ராஜ் தனது ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அதில் பேஸ்புக், ட்விட்டர் ஆகிய இணையதளத்தில் தனது பெயரில் இருக்கும் போலியான கணக்குகளை பின்தொடர வேண்டாம் எனவும் இன்ஸ்டாகிராம் தளத்தை மட்டுமே அவர் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.