‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு, பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’ – வைரமுத்து பதில் ட்வீட்!!

0

இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறித்து, வைரமுத்துவின் பாடல் வரிகளை மாற்றி மக்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து வைரமுத்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

வைரமுத்து ட்வீட்

கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்றம் கண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் லிட்டருக்கு காசுகளின் அடிப்படையில் உயர்ந்து வந்த பெட்ரோல் மற்றும் டீசலின் விலை தற்போது சதத்தை எட்டியுள்ளது. இதனால் வாகனம் உபயோகிக்கும் மக்கள் கடும் துயரத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் தொடர் உயர்வு குறித்து கண்டங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

நாட்டில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்தையும் நகைச்சுவையாக்கி இணையத்தில் உலவவிடுவது நெட்டிசன்களின் வழக்கமாகிவிட்டது. இந்நிலையில் வைரமுத்து அவர்களின் பாடல் வரிகளை பெட்ரோல் விலை உயர்வுக்கேற்றபடி மாற்றி அமைத்துள்ளனர் நெட்டிசன்கள். தற்போது சினிமா பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து பெட்ரோல் உயர்வு குறித்து ட்வீட் ஒன்று செய்துள்ளார்.

வாணி போஜனுடன் மீண்டும் இணையும் இளம் நடிகர் – இணையத்தில் கசிந்த தகவல்!!

அவர் வெளியிட்ட பதிவில், ‘என் பாடல் வரிகளை மாற்றி எனக்கே அனுப்புகிறார்கள்’ என்று பதிவிட்டுள்ள அவர் மாற்றப்பட்டுள்ள பாடல் வரிகளையும் பகிர்ந்துள்ளார். ‘காதல் வந்தால் சொல்லி அனுப்பு. பெட்ரோல் இருந்தால் வருகிறேன்’ என பதிவிட்டுள்ளார். இந்த வரிகள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் சமூகத்தில் அவதிப்பட்டு வரும் மக்களின் கருத்தினை அரசாங்கத்தின் முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here