ஐபிஎல் தொடர் – பெயரை மாற்றிய பஞ்சாப் அணி!!

0

தற்போது இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்குகொள்ளும் பஞ்சாப் அணி தற்போது தங்களது அணியின் பெயரை மாற்றியுள்ளது.

கிங்ஸ் லெவேன் பஞ்சாப்:

கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் வைத்து ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஆண்டு தோறும் இந்த தொடருக்காக ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு வருவார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களிடம் இந்த தொடர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான மினி ஏலம் நாளை மாலை 3 மணிக்கு சென்னையில் வைத்து நடைபெற உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டி பஞ்சாப் அணிக்கு சிறப்பாக அமையவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஆனால் அந்த அணி கடுமையாக போராடி கடைசி நேரத்தில் தான் அனைத்து போட்டிகளிலும் தோல்வியை கண்டது. அந்த அணியின் கேப்டன் ராகுல் சிறப்பான பார்மில் இருந்தார். மேலும் அணியின் கேப்டனாக அவர் சிறப்பான முறையில் செயல்பட்டார். இருந்தும் அந்த அணி தோல்வியை தான் தழுவியது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி குறைப்பு – மாநில அரசு அதிரடி!!

தற்போது இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியை புது பொலிவுடன் களமிறக்க அந்த அணியின் நிர்வாகம் முடிவு செய்தது. இதனை அடுத்து அந்த அணியின் பெயர் ‘கிங்ஸ் லெவேன் பஞ்சாப்’ என்று இருந்ததை தற்போது ‘பஞ்சாப் கிங்ஸ்’ என்று மாற்றியுள்ளனர். இதனை இந்த அணியின் உரிமையாளர் மொஹித் பர்மன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here