இந்தியா மற்றும் இங்கிலாந்து அணியினர் இன்று இரவு தங்களது மூன்றாவது டி 20 போட்டியை விளையாட உள்ளனர். இந்த போட்டியில் யார் வெற்றிபெற போகிறார்கள் என்பதை அறிய அனைவரும் ஆர்வமாக காத்து வருகின்றனர்.
இந்தியா vs இங்கிலாந்து:
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி 20 மற்றும் 3 ஒரு நாள் தொடர்களை விளையாட வந்தது. இதில் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்த நிலையில் டி 20 தொடரை கைப்பற்றும் நோக்கில் உள்ளது. மேலும் அதற்கு ஏற்றார் போல் அந்த அணியில் உலகம் தரம் வாய்ந்த வீரர்களும் உள்ளனர். இதனை உறுதி படுத்தும் வகையில் இந்தியாவிற்கு எதிரான முதல் டி 20 போட்டியில் தனது அசத்தலான வெற்றியை பதிவு செய்து அசத்தியது இங்கிலாந்து அணி.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆனாலும் கூட இந்த இரு அணிகளுக்கான இரண்டாவது டி 20 போட்டியில் சர்வதேச அளவில் தனது முதல் போட்டியை விளையாடிய இஷான் கிஷன் அனுபவம் வாய்ந்த வீரர் போல் தனது முதல் போட்டியிலே அதிரடி காட்டினார். இவருக்கு கம்பெனி கொடுக்கும் வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லியும் தனது அதிரடியை அற்புதமாக வெளிப்படுத்தி, யாரெல்லாம் கோஹ்லி பார்ம் அவுட் என்று சொன்னார்களோ அவர்களின் வாயை அடைக்கும் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!
இந்த இரு வீரர்களின் அதிரடியான ஆட்டத்தினால் 2வது டி 20 போட்டியில் இந்திய அணி தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. தற்போது டி 20 தொடர் 1-1 என்ற சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த இரு அணிகளுக்குமான மூன்றாவது டி 20 போட்டி இன்று மாலை நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளும் சமபலம் வாய்ந்ததால் இந்த போட்டி மிக கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.