#INDvsAUS கேஎல் ராகுல் & ரிஷப் பண்ட் ரொம்ப டேஞ்சர் – ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெயின்!!

0

ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான டிம் பெயின் இந்திய அணியின் வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் இவர்கள் இருவரும் மிகவும் அபாயகரமான வீரர்கள், போட்டியை தங்கள் வசம் திருப்பும் திறன் உள்ளது என்று புகழ்ந்து தள்ளி உள்ளார்.

ஆஸ்திரேலியா vs இந்தியா:

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த 17ஆம் தேதி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. அந்த போட்டியில் இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 244 ரன்கள் குவித்து தனது ஆட்டத்தை இழந்தது. அதன்பின் தனது இன்னிங்சை துவக்கிய ஆஸ்திரேலிய அணி பும்ராஹ் மற்றும் அஸ்வினின் சிறப்பான பந்து வீச்சால் 191 ரன்களில் தனது ஆட்டத்தை இழந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Tim Paine
Tim Paine

53 ரன்கள் முன்னிலையில் இருந்த இந்திய அணி 2 வது இன்னிங்சில் சொதப்பியது. வெறும் 36 ரன்கள் எடுத்த நிலையில் தனது ஆட்டத்தை இழந்தது. இதனால் ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது. தற்போது நாளை 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இனி வரும் போட்டிகளை கோஹ்லி மற்றும் ஷமி விளையாட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ரஹானே இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவார்.

அபாயகரமான வீரர்கள்:

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் கூறியதாவது, 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்கள் இல்லையென்று குறைவாக எண்ணிட முடியாது, ஏனெனில் கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட் மற்றும் சுமங் கில் போன்ற வீரர்கள் களத்தில் அதிக நேரம் நீடித்தால் போட்டி எந்த நிலையில் இருந்தாலும் இவர்கள் தங்கள் வசம் திருப்பி விடுவார்கள்.

#INDvsAUS ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டி – இந்திய 11 அணி அறிவிப்பு!!

இவர்கள் மிகவும் அபாயகரமான வீரர்கள். மேலும் இந்திய அணி 2வது போட்டியில் பல மாற்றங்களுடன் களமிறங்கப் போவதாக தெரிகிறது. அதில் இந்த 3 வீரர்கள் இடம் பிடித்தால் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி விடுவார்” என்று கூறியுள்ளார். இவர் கூறியதை போன்றே 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ரிஷப் பண்ட் மற்றும் சுமங் கில் ஆகியோருக்கு இடம் கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here