தமிழகம், புதுவை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு வறண்ட வானிலையே காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
தமிழகத்தின் வானிலை:
தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக பருவநிலை மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக லேசான மழை பெய்து வந்தது. தற்போது வறண்ட வானிலையே தொடர்கிறது. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலேயே காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசிக்கான முன்னோட்டம் – 4 மாநிலங்களில் நடத்த மத்திய அரசு திட்டம்!!
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தின் வால்பாறை பகுதியில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 27 ஆம் தேதி வடக்கு அரபிக்கடல், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிகடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 28 ஆம் தேதி தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.