கடந்த மாதம் பிப்ரவரி 5ல் விஜய் வீடு மற்றும் அலுவலங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர். தற்போது மீண்டும் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த வந்த தகவல்களால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
மீண்டும் ஐடி ரெய்டு..!
கடந்த ஆண்டு வெளியான பிகில் பட சம்பளம் குறித்து விஜயின் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த பிப்ரவரி 5ம் தேதி ஒருநாள் முழுவதும் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர்.
இப்போது மீண்டும் விஜயின் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியுள்ளனர். ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி விஜய் ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இரு தினங்களுக்கு முன் மாஸ்டர் பட இணை தயாரிப்பாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |