உதவியாளர், டிரைவர் உட்பட 3 காலிப்பணியிடங்களுக்காக கோவையில் குவிந்த 500 முதுகலை, பி.எச்டி பட்டதாரிகள்..!

0

கோயம்புத்தூர் தொண்டாமுத்தூரில் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் டிரைவர் வேலைக்கு நடைபெற்ற நேர்காணலில் முதுகலை, பி.எச்டி படித்தவர்கள் அதிகளவில் குவிந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

3 பணியிடத்திற்கு 500 பேர்..!

கோவை தொண்டாமுத்தூரில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள டிரைவர், கிளெர்க் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய 3 பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் டிரைவர் பணிக்கு 68 பேரும், அலுவலக உதவியாளர் பணிக்கு 160 பேரும், கிளார்க் பணிக்கு 248 பேரும் மொத்தம் 500 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர்.

இதற்கான நேர்காணல் இன்று காலை 8 மணிமுதல் தொடங்கியது. இதற்கு பி.எச்.டி., எம்.பி.எல்., படித்த முதுகலை பட்டதாரிகளும், இளநிலை பட்டதாரிகளும் அதிகளவில் வந்திருந்தது அனைவர்க்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here