கோயம்புத்தூர் தொண்டாமுத்தூரில் ஊராட்சி ஒன்றியத்தில் அலுவலக உதவியாளர் மற்றும் டிரைவர் வேலைக்கு நடைபெற்ற நேர்காணலில் முதுகலை, பி.எச்டி படித்தவர்கள் அதிகளவில் குவிந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.
3 பணியிடத்திற்கு 500 பேர்..!
கோவை தொண்டாமுத்தூரில் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள டிரைவர், கிளெர்க் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய 3 பணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் டிரைவர் பணிக்கு 68 பேரும், அலுவலக உதவியாளர் பணிக்கு 160 பேரும், கிளார்க் பணிக்கு 248 பேரும் மொத்தம் 500 க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர்.
இதற்கான நேர்காணல் இன்று காலை 8 மணிமுதல் தொடங்கியது. இதற்கு பி.எச்.டி., எம்.பி.எல்., படித்த முதுகலை பட்டதாரிகளும், இளநிலை பட்டதாரிகளும் அதிகளவில் வந்திருந்தது அனைவர்க்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |