கோவை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர் வேலைக்காக பட்டமேற்படிப்பு படித்துக் கொண்டிருக்கும் ஒரு மாணவி தேர்வு செய்யப்பட்டு பணிநியமன ஆணை பெற்றுள்ள நிகழ்வு அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
பட்டதாரிகள் உட்பட 7,300 பேர்..!
கோவையில் 549 துப்புரவு பணியாளர் பணிக்காக இடஒதுக்கீடு முறையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்கு என்ஜினீயர்கள், பிஎஸ்சி., பிகாம்., படித்த பட்டதாரிகள் உட்பட 7300 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்நிலையில் 321 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் மோனிகா என்ற 23 வயது எம்எஸ்சி., படித்து கொண்டிருக்கும் மாணவியும் தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
துப்புரவு பணியாளர் பணிக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியே 8ம் வகுப்பு தான் என்ற போதிலும் எம்எஸ்சி., பட்டதாரி தேர்வானது தமிழ்நாட்டில் பட்டதாரிகளுக்கு நிலவி வரும் வேலையில்லா திண்டாட்டத்தை தெளிவாக காட்டுகிறது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |