கடந்த இரு மாதங்களாக தமிழகத்தில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், சமீபத்திய சில நாட்களாக மழை பொழிந்து, மக்களுக்கு வெயிலை தனித்து குளிரூட்ட தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் ஹாப்பியாக இருந்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, இனி வரும் நாட்களில் அக்னி வெயில் உச்சம் பெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு ஏற்றாற்போல, பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறது.
இந்த வகையில், தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தென்காசி, கன்னியாகுமரி, திண்டுக்கல், நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.