லலிதா ஜூவல்லரி நிறுவன வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை சோதனை!!

0

தமிழகத்திலுள்ள லலிதா ஜூவல்லரிக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கூறி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

லலிதா ஜூவல்லரி

பணப்பட்டுவாடா மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றனர். அதனடிப்படையில் நேற்று அரசு ஒப்பந்ததாரர்கள் 2 பேர் வீட்டில் சோதனை நடைபெற்று, 3 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது லலிதா ஜூவல்லரி நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறையினருக்கு தகவல்கள் வந்துள்ளது. அதனடிப்படையில் தமிழகத்திலுள்ள லலிதா ஜூவல்லரிக்கு சொந்தமான அனைத்து நிறுவனங்களிலும் சோதனை நடப்பதாக வருமான வரித்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

#INDvsENG 4 வது டெஸ்ட் – அஸ்வின், அக்சர் அசத்தல் பவுலிங்! 8 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து தடுமாற்றம்!!

லலிதா ஜூவல்லரியின் கணக்குகளை நீண்டகாலமாக கண்காணித்து வருவதாகவும், தற்போது வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும் வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆரம்பநிலையில் 10 இடங்களில் மட்டுமே சோதனைகள் நடைபெறுகிறது என்றும், இவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சோதனை இரண்டு நாட்கள் நடக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த சோதனையின் முடிவில் தான் வரி ஏய்ப்பு விவரம் மற்றும் வருமானம் குறித்த முழு தகவல் பெறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here