தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கத்திரி வெயில் கொளுத்தி வருவதால் அத்தியாவசிய வேலை மற்றும் வாகன ஓட்டிகள் வெளியில் சென்று வர மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில் ராஜஸ்தான், டெல்லி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மேற்கு மற்றும் வடமேற்கு மாநிலங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
மற்ற பகுதிகளிலும் அடுத்த 3 நாட்களுக்கு தற்போது உள்ள வெப்பநிலையை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் உயரும். இதன் காரணமாக மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி வெளியீடு.., அன்பில் மகேஷ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!
அதேபோல் இன்று அசாம் மற்றும் மேகாலயாவில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளது. தென்னிந்திய வளிமண்டல கீழடுக்கில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் ஓரிரு பகுதிகளில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.