தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 10 ஆம் மற்றும் 11 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் முடிந்தவுடன் 1 முதல் 9 வகுப்புக்கான தேர்வுகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த விடுமுறையை தொடர்ந்து ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் தொடங்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டு வழக்கத்தை விட கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில் அதிகமாக காணப்படுகிறது. இதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருந்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக 10, 11ம் பொதுத்தேர்வு மாணவர்களே.., துணை தேர்வுக்கு விண்ணப்பிக்க இதுதான் கடைசி நாள்!!
அதாவது வரும் ஜூன் 1 ம் தேதி 6 முதல் 12 ஆம் வகுப்புக்கான பள்ளிகள் அனைத்தும் திட்டமிட்டபடி திறக்கப்படும் என கூறியுள்ளார். மேலும் 1 முதல் 5ம் வகுப்புகளுக்கு ஜூன் 5ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் தமிழகத்தில் கோடை விடுமுறை தள்ளிப் போகும் என்ற பொய்யான தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.