சமீப காலமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும், அதீத வெயில் சூழல் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இந்த சூழலில் தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து குளிர்வித்து வருகிறது.
அந்த வகையில் இன்று (ஏப்ரல் 18) மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.