ஜனவரி மாத சிறந்த வீரர் – பட்டியலில் இடம்பெற்ற ரிஷாப் பாண்ட்!!

0

ஐசிசி முதன்முறையாக மாதந்தோறும் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விருது வழங்கப்போவதாக அறிவித்திருந்தது. தற்போது ஐசிசியின் பரிந்துரை பட்டியலில் இந்தியாவை சேர்ந்த ரிஷாப் பாண்ட் தேர்வாகியுள்ளார்.

ஐசிசி:

ஐசிசி முதன்முறையாக அந்தந்த மாதத்தில் போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரருக்கு விருது வழங்கப்போவதாக சில தினங்களுக்கு முன்பாக அறிவித்திருந்தது. இதனை ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த வீரர்களுக்கு வாக்களித்து தேர்வு செய்யலாம் என்றும் ஐசிசி அறிவித்திருந்தது. மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பத்திரிகை நிறுவனங்கள், ஐசிசி நிர்வாகிகள் என அனைவரையும் இதற்கு வாக்களித்து சிறந்த வீரரை தேர்வு செய்யுமாறு தெரிவித்திருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் இந்த விருது பெறப்போகும் வீரரின் பெயரை மாதத்தின் 2 வது திங்கள்கிழமை அன்று தெரிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த மாதத்திற்கான சிறந்த வீரருக்காக இந்தியா அணியின் ரிஷாப் பாண்ட், அஸ்வின், சிராஜ் மற்றும் நடராஜன் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்தது. மேலும் இங்கிலாந்து அணியின் ரூட், ஆஸ்திரேலியாவின் ஸ்மித் ஆப்கானிஸ்தானின் குர்பாஸ் மற்றும் அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் உள்ளிட்ட பெயர்களும் பரிசீலனையில் இருந்தது.

195 தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போட அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு!!

இவர்களில் இருந்து தற்போது விருதிற்காக 3 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அந்த 3 பேர் யார் என்றால், ரிஷாப் பாண்ட், ஸ்டிர்லிங் மற்றும் ரூட். இதேபோல் மகளிற்கான கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்கிய வீராங்கனையாக பாகிஸ்தானின் டயானா பைக், தென் ஆப்ரிக்கவின் காப் மற்றும் ஷப்னிம் இஸ்மாயில் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here