‘பாரதி கண்ணம்மா’ படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை – காரணம் என்ன??

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ தொடரின் படப்பிடிப்பில் அந்த தொடரின் நாயகி கண்ணம்மா மயங்கி விழுந்தது போலவும் அவரை நடிகர் தூக்கி கொண்டு போவதாகவும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

மயங்கி விழுந்த நடிகை

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் தொடர் ‘பாரதி கண்ணம்மா’. இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒன்றாகும். விஜய் டிவியின் மற்ற தொடர்களை போல் அல்லாது இந்த தொடர் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான கதைக்களத்தோடு நகர்கிறது. கடந்த ஒரு மாதத்துக்கு முன் 8 வருடங்களுக்கு பிறகு என்று தொடங்கிய சீரியலின் கதைக்களம் ரசிகர்கள் மத்தியில் வேற மாதிரியான ரீச். இந்த தொடரில் நாயகி கண்ணம்மாவாக நடித்து வருபவர் புதுமுக நடிகை ரோஷினி. கதாநாயகனாக நடித்து வருபவர் அருண்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் – பிப்ரவரி 5ம் தேதி வரை நடைபெறும்!!

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது நடந்துகொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா படப்பிடிப்பில் அவர் மயங்கி விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மயங்கி விழுந்த கண்ணம்மாவை பாரதி தூக்கிக்கொண்டு போவது போல இணையதளத்தில் விடியோக்கள் வெளியாகியுள்ளது. கண்ணம்மாவுக்கு என்னாச்சு என்று சீரியல் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர். இது படப்பிடிப்பிற்காக எடுக்கப்பட்ட விடியோவா அல்லது உண்மையாக நடந்ததா என்று குழப்பதில் உள்ளனர்ரசிகர்கள். அந்த காணொளி படப்பிடிப்பிற்காக மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது என தற்போது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here