ஐசிசி கடந்த மாதம் முதல் போட்டிகளில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு விருதுகளை வழங்கி வருகிறது. தற்போது கடந்த மாதம் விருத்திற்கான பெயர் பட்டியலில் அஸ்வின் பெயர் இடம்பிடித்துள்ளது.
அஸ்வின்:
ஐசிசி வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல முயற்சிகளை செய்து வருகிறது. மேலும் வீரர்களுக்கென தனி புள்ளி பட்டியல் அமைத்து அதில் வீரர்களின் பெயர்களை புள்ளிகள் அடிப்படையில் வரிசைப்படுத்தி வெளியிட்டும் வருகிறது. தற்போது அந்த வரிசையில் கடந்த ஜனவரி மாதம் முதல் ஐசிசி ஓர் புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது. அதன்படி நடப்பு மாதத்தில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் வீராங்கனைக்கு சிறந்த வீரருக்கான விருது வழங்கப்படும் என்று அறிவித்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன்படி கடந்த ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை ரிஷாப் பாண்ட் வென்றார். தற்போது பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருது வழங்கப்படவுள்ளது. அதற்கான பெயர் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர் நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம் உட்பட 176 ரன்களும் மற்றும் 24 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!
இவரைப்போல் இங்கிலாந்து கேப்டன் ரூட் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவர் ஒரு இரட்டை சதம் உட்பட 333 ரன்களை குவித்து 6 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் கைல் மேயர்ஸ், இவர் இரண்டு இன்னிங்சில் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார். தற்போது தங்களுக்கு பிடித்த வீரர்களுக்கு ரசிகர்கள் இணையம் மூலம் வாக்களிக்கலாம்.