கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதி போட்டியில் சானியா ஜோடி வென்று அசத்தியது. தற்போது இந்த ஜோடி அரை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
டென்னிஸ்:
கொரோனா பரவல் தற்போது குறைத்து வருவதால் அனைத்து தரப்பு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த விளையாட்டு போட்டிகள் அனைத்தும் தக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தோஹாவில் கத்தார் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்த தொடரின் காலிறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் சானியா மிர்சா, ஸ்லோவேனியாவின் ஆண்ட்ரேஜா ஜோடி கேப்ரியேலா மற்றும் பிளின்கோவா ஜோடியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் சானியா ஜோடி தொடக்கத்தில் இதே தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்தது. முடிவில் 6-2, 6-0 என்ற செட் கணக்கில் தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!
தற்போது இந்த வெற்றியின் மூலம் சானியா ஜோடி அரை இறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியது. இந்த ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணமாக இருந்து வருகிறது. காலிறுதி போட்டிக்கு இந்த ஜோடியுடன் மோதும் மற்றொரு ஜோடி பற்றிய தகவல் விரைவில் வெளிவரும் .