ஒடிசா மாநிலத்தில் கணவன் மனைவிக்கு EMI ஃபோனை பரிசாக அளித்ததால் அந்த பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மனைவி தற்கொலை:
ஒடிசா மாநிலத்தில் உருகும் மல்காங்கிரி என்ற மாவட்டத்தில் ஒரு பகுதியில் சந்தோஷமாக வாழ்க்கையை கழித்தவர் தான் கன்ஹாய். இவர் கடந்த ஆண்டு ஜோதி என்ற பெண்ணை குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் செய்தார். சமீபத்தில் தனது மனைவிக்கு அதிக விலை மதிப்புள்ள ஒரு ஆண்ட்ராய்டு ஃபோன் பரிசாக அளித்துள்ளார். இந்த போனின் விலை ரொம்ப அதிகமாக இருந்ததால் கன்ஹாய் அதை EMI என்கிற மாதத்தவணை மூலம் கட்டி வந்துள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த முறையில் தான் ஃபோனை வங்கியுள்ளதை முற்றிலும் மனைவிக்கு தெரியாமல் மறைத்துள்ளார். இந்நிலையில் இறுதி மாத தவணை வந்ததால் கணக்கை முடிப்பதற்கு கன்ஹாய் வீட்டிற்கு நிதி நிறுவன அதிகாரிகள் சென்றுள்ளார். அப்போது உண்மையை முழுதாக அறிந்த மனைவி ஜோதி, கன்ஹாய் மீது கோபப்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ரயில் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு – கூட்ட நெரிசலை சமாளிக்க புதிய யுக்தி! நிர்வாகம் அதிரடி!!
கன்ஹாய் தன்னிடம் மறைத்ததை தாங்க முடியாமல் ஜோதி அவர் கண் முன்னே விஷத்தை குடித்துவிட்டார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கன்ஹாய் சற்று தடுமாறி கீழே விழுந்தார். இதனை தொடர்ந்து இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மனைவி ஜோதி உயிரிழந்தார். மேலும் கன்ஹேய் இன்னும் சுய நினைவுக்கு வரவில்லை என்று அந்த மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளது.