தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு 17, 18, 19 ஆம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில் அடுத்த 3 நாட்கள் விடுமுறை என்பதால் அதற்கு முந்தைய நாளான நேற்று (ஏப்ரல் 16) வழக்கத்தை விட மது விற்பனை அதிகமாக நடைபெற்றுள்ளது.
அதாவது நேற்று ஒரே நாளில் வழக்கமான விற்பனையை விட 3 மடங்கு கூடுதலாக மது விற்பனை நடைபெற்றிருப்பதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவாக தினசரி மது விற்பனை ரூ.150 கோடி அளவுக்கு இருக்கும் என்றும் நேற்று அதிக விற்பனை நடைபெற்றதால் ரூ.400 கோடி அளவுக்கு மது விற்பனையாகி இருப்பதாக தெரிவித்தனர். குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மது விற்பனை அதிக அளவில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மக்களே குட் நியூஸ்.., இந்த நாளில் உள்ளூர் விடுமுறை.., மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!