சகல சௌபாக்யங்களை பெற உதவும் ‘உப்பு தீபம்’ – வழிபடும் முறை!!

0
உப்பு விளக்கு
உப்பு விளக்கு

ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களுக்கு அவர்களின் செயல்களே காரணம் ஆகின்றன. முன் ஜென்ம பாவ புண்ணியங்களின் அடிப்படையிலேயே அவர்களின் வாழ்க்கையும் அமைகிறது. எனவே வீட்டில் உள்ள கஷ்டங்கள் தீர்ந்து சகல சௌபாக்கியங்களையும் பெற சில பரிகாரங்கள் உள்ளன.

உப்பு விளக்கு

வீட்டில் உள்ள பிரச்சனைகள் அகல மற்றும் பண பிரச்சனைகளை தீர்க்க உப்பு தீபம் ஏற்றி வழிபட்டால் சகல ஐஸ்வரியத்தையும் பெறலாம் என சாஸ்திரம் கூறுகிறது. எனவே தான் உப்பை மகாலட்சுமி போல பாவிக்க வேண்டும். ஒரு வீட்டில் உப்பு தீர்ந்ததற்கு பின் வாங்க கூடாது. அந்த உப்பு தீரும் முன்னரே வாங்கி வைக்க வேண்டும். அப்பொழுது தான் வீட்டில் மஹாலக்ஷ்மி தங்கும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் நமக்கு நினைத்தவை வெற்றி பெற வேண்டும் என்றால் கல்லுப்பை எடுத்து வீட்டின் பூஜையறையில் வைத்து வேண்டி அதனை போகும் இடத்திற்கு கொண்டு சென்றால் நினைத்த காரியத்தில் வெற்றியே கிட்டும்.

உப்பு விளக்கு
உப்பு விளக்கு

மேலும் பலருக்கு உப்பு தீபம் ஏற்றலாமா?? என்ற சந்தேகம் இருக்கும். தாராளமாக வீட்டில் உப்பு தீபம் ஏற்றலாம். ஏனெனில் இந்த உப்புக்கு நமது வீட்டில் உள்ள கெட்ட ஆற்றலை வெளியேற்றும் சக்தி அதிகம். எனவே தான் உப்பை தெய்வமாக எண்ணி வழிபடுகிறோம்.

உப்பு விளக்கு ஏற்றும் முறை:

கடைகளில் விற்கும் அகல் விளக்கை வாங்கி கொள்ளவும். இதனை நன்கு சுத்தம் செய்து ஒரு சிறிய பித்தளை தட்டை எடுத்துக் கொள்ளவும். அதனை நன்கு சுத்தம் செய்து அதில் மஞ்சள் குங்குமம் வைக்கவும். இப்பொழுது அந்த பித்தளை தட்டில் கல்லுப்பை போடவும். அதன் மேல் அகல் விளக்கை வைக்கவும். அதன் மேல் மற்றொரு விளக்கை வைத்து விளக்கேற்றவும்.

உப்பு விளக்கு
உப்பு விளக்கு

இவ்வாறு வீட்டில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் காலை 6 மணி அல்லது மாலை வேளையில் விளக்கேற்றி கடவுளை தரிசித்து வர வேண்டும். அப்படி இல்லையென்றால் கூட பௌர்ணமி தினத்தன்று இந்த விளக்கை ஏற்றி வழிபட வேண்டும். இதனால் வீட்டில் உள்ள கஷ்டங்கள் மறைந்து சகல சௌபாக்கியங்களை பெற்று வாழலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here