உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதில் இஞ்சிக்கு முக்கிய பங்கு உள்ளது. இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. மேலும் இது ஜீரண சக்தியை அதிகரிக்கும். இஞ்சியை சாப்பாட்டில் சேர்க்கும்போது குழந்தைகள் அதனை கீழே தான் போடுகின்றனர். பலருக்கு இஞ்சியை கண்டாலே பிடிப்பது இல்லை. புதிய விதமாக இஞ்சியை அரைத்து குழம்பு வைத்து கொடுத்தால் கட்டாயம் சாப்பிடுவார்கள். இப்பொழுது இஞ்சி குழம்பு எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
- இஞ்சி
- பூண்டு – 10 பல்
- வெங்காயம் – 2
- சீரகம் – 1 தேக்கரண்டி
- வெந்தயம் – 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- கொத்தமல்லி
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
- தேங்காய் – அரை மூடி
- புளி
செய்முறை:
முதலில் கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் சின்னதாக நறுக்கிய இஞ்சி மற்றும் துருவிய தேங்காயை சேர்த்து வதக்கவும். ஓரளவுக்கு வதங்கியதும் அதனை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். அதன்பின் கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் சோம்பு, வெந்தயம், கடுகு சேர்த்து தாளித்து அதில் பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்க்கவும்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
வெங்காயம் நன்கு வதங்கியதும் அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள இஞ்சியை அதில் சேர்த்து நன்கு வதங்கியதும் புளி தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். இப்பொழுது எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சூப்பரான இஞ்சி குழம்பு தயார்.