தேவையான பொருட்கள்
பன்னீர், தயிர் ஒரு கப், மிளகாய் தூள், கரம் மசாலா, கஸ்தூரிமேத்தி, இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மல்லித்தூள், மஞ்சள் தூள், எண்ணெய், பெரிய வெங்காயம், குடை மிளகாய், தந்தூரி ஸ்டிக்.
செய்முறை
முதலில் பன்னீரை வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து கொள்ளவும். பின்பு வெங்காயத்தை சதுர வடிவில் வெட்டி கொள்ளவும். அதே போல் குடைமிளகாவையும் சதுரவடிவில் வெட்டி கொள்ளவும். ஓரு அகண்ட பாத்திரத்தில் தயிர் சேர்த்து மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, மல்லித்தூள் மற்றும் கஸ்தூரிமேத்தி சேர்த்து கலந்து கொள்ளவும். பன்னீரை எடுத்து சதுரமாக நறுக்கி கொள்ளவும். அதன் பின் நறுக்கிய துண்டுகளை கலவையில் தோய்த்து எடுத்து வைத்து கொள்ளவும்.
பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் குடைமிளகாய் அந்த கலவையில் தோய்த்து எடுக்கவும். அதனை அரை மணிநேரம் ஊற வைக்கவும். பின்பு தந்தூரி ஸ்டிக்கில் பன்னீர் வெங்காயம் குடைமிளகாயை ஒன்றன்பின் ஒன்றாக சொருகவும். பின்பு தவாவில் எண்ணெய் ஊற்றி அந்த தந்தூரி ஸ்டிக்கை வைக்கவும் நன்றாக வேகும்வரை திருப்பி போட்டு கொண்டே இருக்கவும். இப்போது பன்னீர் டிக்கா ரெடி.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |