சினிமாவில் பல போராட்டங்களுக்கு பிறகு சூப்பர் ஸ்டார் என்ற ஒரு இடத்தை பிடித்து தற்போது வரை அதை யாருக்கும் விட்டு தராமல் கெட்டியாக பிடித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் ஜெயிலர், லால் சலாம் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் ஜெயிலர் திரைப்படம் நாளை மறுநாள் வெளியாக இருக்கிறது. பொதுவாக ரஜினி எளிமையானவர்,எதையும் ஓப்பனாக பேசுபவர் என்று எல்லோருக்கும் தெரியும். அந்த வகையில் ஏவிஎம் சரவணனிடம் ரஜினி ஒரு விஷயத்தை ஓப்பனாக கேட்டுள்ளார். அதாவது 90ஸ் காலகட்டத்தில் ரஜினி பீக்கில் இருந்த சமயத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஏவிஎம் சரவணன் அழைத்திருந்தார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
டிவி பரிசாக கொடுக்கும் விழாவில் கலந்து கொண்ட ரஜினி டிவிகளை ஒவ்வொருவருக்காக வழங்கி விழாவை சிறப்பித்தார். அப்போது ஏவிஎம் சரவணனிடம் எல்லோருக்கும் டிவி கொடுத்தீங்க எனக்கு ஒரு டிவி தரலையே என கேட்டிருக்கிறார். அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஏவிஎம் சரவணன் ரஜினி வீட்டிற்கு திரும்பிய கொஞ்ச நேரத்தில் அழகான டிவி ஒன்று பரிசாக கொடுத்துள்ளார். அதன் பின்னர் ரஜினி மனைவி ஏவிஎம்க்கு கால் செய்து விளையாட்டாக தான் சார் கேட்டார் என்று கூற அதற்கு ரஜினி இல்லை சார் நான் உண்மையிலேயே கேட்டேன் என்று கூறியுள்ளார்.
1st Rank.., குடியரசு தலைவரிடம் பட்டம் வாங்கிய குக் வித் கோமாளி பிரபலம்.., குவியும் வாழ்த்து!!