இரத்த அழுத்தத்தை குறைக்கும் “மூலிகை டீ” ரெசிபி – சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்தது!!

0

மழை காலங்கள்ல நிறைய நோய்கள் நம்மை தாக்கும். எல்லாத்துக்கும் மருத்துவர் கிட்ட போறது முடியாத காரியம். நம்ம வீட்லயே பல நோய்களை போக்குறதுக்கு ரொம்ப சுலபமான வழி இருக்குங்க. நோய்கள போக்குதுன்னு சொன்னதுனால ஏதோ பெரிய விஷயமா இருக்குமோன்னு யோசிக்காதிங்க. ரொம்ப சின்ன விஷயம் தாங்க. நம்ம தினமும் குடிக்கும் டீ தாங்க மருந்து. நம்ப முடியலையா? நம்பி தாங்க ஆகணும். ஒரு முறை ட்ரை பண்ணிப்பாருங்க. நீங்களும் எல்லாருக்கும் சொல்லி குடுப்பீங்க. மூலிகை டீ எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள் :

சுக்கு – 50 kg
வால் மிளகு – 50 gm
திப்பிலி – 50 gm
ஏலக்காய் – 50 gm
கொத்தமல்லி விதை – 50 gm
சித்தரத்தை – 50 gm
அதிமதுரம் – 50 gm
நன்னாரி – 50 gm
காய்ந்த ஆவாரம் பூ – 50 gm
நாட்டு சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு நன்கு காய்ந்த, ஈரப்பதம் இல்லாத மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தனித்தனியே அரைத்துக் கொள்ள வேண்டும். சுக்கை மட்டும் அரைப்பதற்கு முன்பு தோலை நீக்கி விட வேண்டும். எல்லாவற்றையும் நன்கு நைசாக அரைத்து கலந்து கொள்ள வேண்டும். இந்த டீ பொடியை ஒரு காற்று புகாத ஒரு கண்ணாடி ஜாரில் சேமித்துக் கொள்ளவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சின்னத்திரை நடிகை சித்ரா மர்ம மரணம் – இன்று உடற்கூறாய்வு, சக நடிகர்களிடம் விசாரணை!!

இந்த டீ பவுடர் கெட்டுப் போகாது. 3 மாதங்கள் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொழுது, ஒரு பேனில் 2 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அதில், 2 டேபிள் ஸ்பூன் மூலிகை டீ தூளை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு, ஒரு டம்ளரில் வடி கட்டி 1 டேபிள் ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்க்க வேண்டும். இப்பொழுது சூடான, சுவையான “மூலிகை டீ” ரெடி.

மருத்துவ பயன்கள்:

  • சுக்கு வயிற்றில் இருக்கும் மந்த தன்மையை நீக்குகிறது.மேலும் இருமல், மூட்டு வலி, பல் கூச்சம், வயிற்று பிடிப்பு, தலைவலி, வயிற்று எரிச்சல் போன்றவற்றை சரி செய்கிறது.
  • வால் மிளகானது நாட்பட்ட காசநோய், தொண்டைப்புண், வயிற்று கடுப்பு, மூலக்கடுப்பு, வாந்தி முதலியவற்றை சரி செய்கிறது.
  • திப்பிலி நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் நச்சுக்களை நீக்குவதுடன், தேவையான அளவு பித்த நீரை உற்பத்தி செய்கிறது. மேலும், நமது உள் உறுப்புகலில் இருக்கும் வீக்கத்தை சரி செய்கிறது.
  • ஏலக்காய் பற்கள், ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை குறைகிறது. உடலின் வெளிப் புறத்தில் ஏற்படும் காயங்களை குணமாக்குகிறது. மேலும், வாய் துர்நாற்றம், மன அழுத்தம் போன்றவற்றை நீக்குகிறது.
  • கொத்தமல்லி விதை வைட்டமின்கள் நிறைந்தது. மேலும் இரத்த அழுத்தைதை கட்டுக்குள் வைக்கிறது. அதிமதுரம் சிறுநீரகத்தில் உள்ள கிருமிகளை நீக்குகிறது. மேலும், வயிற்று பிரச்சனை, வழுக்கை, மூட்டுவலி, மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகளுக்கு மருந்தாகிறது.

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த “மூலிகை டீ” குடித்து நமது உடலை உள்ளேயும், வெளியேயும் ஆரோக்கியமாக பராமரிப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here