கடந்த ஆண்டு முதல் வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்ற பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சில மாவட்டங்களில் போலீசார் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதத்துடன் சிறு தண்டனையும் வழங்கி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி கோவை மாநகரில் வாகன ஓட்டிகள் 100% தலைக்கவசம் அணிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் நடவடிக்கையை தீவிர படுத்திருந்தார். இதனால் தலைக்கவசம் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது விதிமுறையின் படி ரூ.1000 அபராதம் பெறப்பட்டு வருகிறது.
மத்திய பட்ஜெட் 2023 : விவசாயிகளுக்கு அடித்த லாட்டரி! குவியப் போகும் முக்கிய சலுகைகள்!!
மேலும் தண்டனையை வலுவேற்ற தலைக்கவசம் அணியாமல் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு 3 மணி நேரம் போக்குவரத்து விழிப்புணர்வு வகுப்பு கட்டாயப் படுத்தப் படுகிறது. இதனால் “வண்டிய கூட வச்சுக்கங்க தயவு செஞ்சு ஆள விடுங்கன்னு” வாகன ஓட்டிகள் கதறி வருகின்றனர்.