மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இது குறித்த எதிர்பார்ப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது.
குவியும் சலுகைகள் :
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். அந்த வகையில் இது சார்ந்த எதிர்பார்ப்புகள் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. சிறு, குறு மற்றும் சுய தொழில் முனைவோர்களுக்கு கடன் அளிக்கும் வசதியை எளிமைப்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதுபோக குழந்தைகளின் கல்வி கட்டணத்திற்கு வருமான வரி சட்டத்தில் இருந்து விலக்கு, சுகாதார காப்பீடு, வீட்டுக் கடன், அசல் மற்றும் வட்டி போன்றவற்றில் இருந்து வரிவிலக்கு இது சார்ந்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர்களே கவனம்.., தன்னம்பிக்கையை கெட்டியா பிடிச்சுக்கோங்க.., பிரதமர் மோடி அறிவுரை!!!
இதுபோக, வேளாண் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இது சார்ந்த முக்கிய சலுகைகளும், அவர்களுக்கான வட்டியில்லா கடன் சார்ந்த திட்டங்களும் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதேபோல் மாத சம்பளம் பெறுவோருக்கு அவர்களின் வருமான வரி விலக்கு வரம்பை ரூபாய் 2.5 லட்சத்திலிருந்து, ரூபாய் 5 லட்சமாக அதிகரிக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.