
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கூடுதலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதன் காரணமாக தெற்கு ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் வடக்கு ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிலும் ஒடிசாவில் உள்ள கோராபுட், நபரங்பூர், மல்கங்கிரி, போலங்கிர், கலகண்டி, கந்தமால் ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.