தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே, கோடைகாலமும் ஆரம்பிக்க உள்ளதால் மக்கள் முடிந்த வரை வீட்டில் இருப்பது தான் நல்லது. இந்நிலையில் வெப்பத்தால் வரும் உடல் வியர்க்குருவை தடுப்பதற்கு நம் அனைவரும் பின்பற்ற வேண்டிய வைத்திய முறைகளை பார்க்கலாம்.
வியர்க்குரு காரணம்:
வெயில் காலத்தில் நம் உடலில் அதிகமாக சுரக்கும் உப்பு நீர் (வியர்வை) வெளியேறுவது தடைபடும் போது அவை வியர்வைக் கட்டிகளாக வெளிப்படுகின்றன. இது நமது உடலுக்கு எரிச்சலை ஏற்படுத்தக் கூடியது. இதை தடுப்பதற்கான வழிமுறைகள் சில உள்ளன.
எவ்வாறு தடுப்பது..?
- உடலுக்கு குளுமை அளிக்கும் சந்தனத்தை கொஞ்சம் மஞ்சளும் தண்ணீருக்கு பதில் ரோஸ் வாட்டரும் கலந்து உடம்பு, கழுத்து என தடவினால் வியர்க்குரு வருவதை தடுக்கலாம்.
- முல்தானி மெட்டியையும் ரோஸ் வாட்டரில் கலந்து வியர்குருவை விரட்ட பயன்படுத்தலாம்.
- பருத்தித் துணியை குளிர்ந்த நீரில் நனைத்து உடலில் போர்த்தி ஈரம் காயும் வரை வைத்திருப்பதும் வியர்க்குரு வருவதை தடுக்கும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |