ஹரியானா மாநிலத்தின் சிவில் மருத்துவ சேவை சங்கம் (HCMSA) சார்பில் மாநில அரசுக்கு சில கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தது. அதாவது ஹரியானா மாநிலத்தில் மருத்துவ நிபுணர்கள் பற்றாக்குறை, முதுகலை படிப்பு பத்திரத் கட்டணத்தை குறைத்தல் மற்றும் மூத்த மருத்துவ அதிகாரிகள் நேரடி ஆட்சேர்ப்பு நிறுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை பரிசீலனைக்கும்படி கடந்த திங்களன்று கோரிக்கை வைத்திருந்தனர்.
மேலும் அரசு இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் டிசம்பர் 29 ஆம் தேதியிலிருந்து வெளி நோயாளர் பிரிவு சேவை நிறுத்தப்படும் என HCMSA சங்கத்தின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார் மேலும் மருத்துவர்களின் இந்தப் போராட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்கு டிசம்பர் 10ஆம் தேதி மையக்குழு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Enewz Tamil WhatsApp Channel
அரசு பள்ளிகளில் இந்த பணியிடங்களை நிரப்ப வேண்டும்.., வெளியான முக்கிய தகவல்!!