இந்திய மக்கள் தொகையில் பாதி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது எனவும் அவர்களில் 90 சதவீதம் பேருக்கு எவ்வித அறிகுறிகளும் இன்றி தங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கூட தெரியாமல் வாழ்ந்துக் கொண்டிருப்பர் என தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
கொரோனா பரவல்:
இந்தியாவில் நான்காம் கட்ட ஊரடங்கு வரும் மே 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் அடுத்தபடியாக 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் தற்போது வரை 1.58 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்புகள் குறித்து பெங்களூரின் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனத்தின் நரம்பியல் ஆய்வுத் தலைவர் டாக்டர் ரவி சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை தெரிவித்து உள்ளார்.
நாட்டில் நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ம் தேதியுடன் முடிவடையும் பொழுது ஜூன் முதல் சமூக பரவல் அதிகரிக்கும் என அவர் தெரிவித்து உள்ளார். இதனால் டிசம்பர் மாத இறுதியில் இந்தியாவில் பாதி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது எனவும் அவர்களில் 90 சதவீதம் பேருக்கு எவ்வித அறிகுறிகளும் இன்றி தங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கூட தெரியாமல் வாழ்ந்துக் கொண்டிருப்பர் என தெரிவித்து உள்ளார்.
கொரோனா பாதிப்புகளை கையாளும் வகையில் மாநிலங்களுக்கு உரிய மருத்துவ கட்டமைப்புகள் முழுவதுமாக வழங்கப்பட வேண்டும். மேலும் குறிப்பாக தீவிர பராமரிப்பு மற்றும் சிகிச்சை தேவைப்படும் என டாக்டர் ரவி அவர்கள் தெரிவித்து உள்ளார்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |