உலகம் முழுவதும் கொரோனா என்னும் வைரஸின் தாக்கத்தால் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது.நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது உயிரிழப்புகளும் குறிப்பிடாத அளவில் உயர்ந்து கொண்டே இருக்கிறது.
கொரோனாவின் கோரதாண்டவம்
உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ள கொரோனா வைரஸினால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 லட்சத்து 5ஆயிரத்து 292 தாண்டி உள்ளது. வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றன உலக நாடுகள் நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் கொத்துக்கொத்தாக மக்கள் உயிரிழக்கின்றனர்.உலகளவில்
இதுவரை 59 லட்சத்திற்கு மேல் கொரோனா பரவலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 62ஆயிரத்துக்கும் மேலாக உள்ளது. இதுவரை 25 லட்சத்து 79ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸின் பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்து உள்ளனர். உலகளவில் அமெரிக்கா தான் கொரோனவால் அதிக பாதிப்பு மற்றும் உயிர் இழப்புகளுடன் கொரோனவால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |