அடர்த்தியான தலை முடி என்பது ஒருவருக்கு மேலும் அழகுதான். நீளமான கருமையான கூந்தலுக்கு யார் தான் ஆசைப்பட மாட்டார்கள்? அந்த கூந்தலை கண்டிப்பாக சரியாக பராமரிக்க வேண்டும். தலைமுடியை பராமரிக்க நிறைய வழிகள் இருந்தாலும் இயற்கையான முறையில் செய்வது மிகவும் முக்கியம் மற்றும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இயற்கையான முறையில் பராமரித்தால் தலைமுடி மேலும் 2 மடங்கு அடர்த்தியாகவும், வேகமாகவும் வளரும்.
தேவையான பொருட்கள்:
பாசிப்பயறு – 5 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கையளவு
அரிசி கழுவிய நீர் – 1/2 கிளாஸ்
செம்பருத்தி பூ – 5
கற்றாழை ஜெல் – 1/4 கப்
செய்முறை:
பச்சைப்பயிரை இரவு முழுவதும் தண்ணீரில் நன்றாக ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் தலை குளிப்பதற்கு முன் ஊற வைத்த பச்சைப்பயிறு மற்றும் மேலே கொடுக்கப்பட்டுள்ள தேவையான பொருட்கள் சேர்த்து மிக்ஸியில் அரைத்து பேஸ்ட் போல் எடுத்துக்கொண்டு தலையில் நன்றாக அப்ளை செய்ய வேண்டும்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
முக்கியமாக தலையின் வேர்பகுதிகளில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின் 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் தலை குளிக்க வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்தால் தலைமுடி நன்றாகவும், அடர்த்தியாகவும் மற்றும் கருமையாகவும் வளரும்.