கனவு என்பது எல்லாருக்கும் தோன்றும். எல்லா கனவுகளுக்கும் பலன் உண்டு என்று சொல்லமுடியாது, ஆனால் குறிப்பிட்ட கனவுகளுக்கு நிச்சியமாக பலனுண்டு. நாம் ஆழ்த்த உறக்கத்தில் இருக்கும் பொழுது தான் கனவு வரும் என்பது அனைவரும் அறிந்த செய்தி. சிலர் கனவு கண்டால் அவர்களுக்கு உண்மையாக நடப்பது போல் இருக்கும் அது கனவா?? நினைவா?? என்று குழப்பமாக இருக்கும். அந்த கனவுக்கான பலன் என்னவாக இருக்கும் என்று தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறதா? இதோ உங்களுக்கான பதிவுகள்.
கனவு பலன்கள்
- நாம் பிறரை அடிப்பது போல் கனவு கண்டால், நமக்கு புது நண்பர்கள் கிடைக்க போவதாக அர்த்தம் மற்றும் நமது புகழ் எல்லா இடங்களிலும் பெருகும்.
- நமக்கு அடிபட்டு காயமடைந்தது போல் கனவு கண்டால், பணக்கஷ்டம் நீங்கி பணவரவு கூடும் மற்றும் கத்தியால் குத்தி கொலை செய்வது போல் கனவு கண்டால், அது நன்மை இல்லை வெளியிடங்களில் நம்மீது கெட்டபெயர் உண்டாகும்.
- அரசாங்க ஊழியர்கள் அறிமுகம் ஆவது போல் கனவு வந்தால், சுற்றுவட்டாரத்தில் உங்களுக்கு பெரிய மதிப்பும் மற்றும் மரியாதையும் உண்டாகும் மற்றும் திருமணம் ஆகாதா பெண்கள் அரசு வேலையில் உள்ளவர்களுடன் அறிமுகம் ஆவது போல் கனவு கண்டால், அந்த பெண் திருமணம் செய்யும் வருங்கால மாப்பிள்ளை மிகவும் வசதியுடன் இருப்பான்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
- ஆண்கள் கனவில் தேவலோக பெண் வந்தால் மிகவும் நன்மை வரக்கூடும் மற்றும் திருமணம் ஆகாத பெண்கள் கனவில் தேவலோக பெண் வந்தால், அப்பெண்ணிற்கு விரைவில் திருமணம் நடக்கும். அதுவே திருமணம் ஆன பெண்ணிற்கு கனவு வந்தால் பொருள் வரவு கண்டிப்பாக வரும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
- திருமணம் ஆகாத ஆணிற்கு, அழகு இல்லாமல் பெண் ஒருத்தி கனவில் வந்தால் அவனது வருங்கால மனைவி மிகவும் அழகாக இருப்பார்கள்.
- நமது கனவில் வித்தியாசமானவர்கள் வந்தால், நமக்கு நம்பிக்கை மோசடி, தீமைகள் மற்றும் ஆபத்து வரும் என்று பொருள்.
- சண்டையில் சிக்கிக்கொண்டு இருப்பது போல் கனவு கண்டால், நம் வாழ்க்கை அமைதியாக இருக்கும் என்று அர்த்தம் மற்றும் சண்டையில் யாராவது நம்மை அடித்துவிட்டால் நமக்கு எதிரி யாரும் இல்லை என்று அர்த்தம்.
- நமது கனவில் தெரிந்த ஒருவர் அழுவது போல் கனவு கண்டால், அவரது வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களை சந்திக்க போகிறார் என்று அர்த்தம்.
- உங்களுக்கு ஆபத்து வருவது போல் கனவு கண்டால், இந்த கனவுக்கு எதிராக உங்கள் வாழ்க்கை நிம்மதியாக மற்றும் சந்தோசமாக இருக்கும்.