கண்களை கவரக்கூடிய கூந்தலை பெற வேண்டுமா? வாரம் ஒருமுறை இந்த ஹேர் பேக் பயன்படுத்தினாலே போதும் முடி சூப்பரா வளரும். இதில் சேர்க்கப்படும் அனைத்து பொருட்களுமே முடி வளர்ச்சியை தூண்டக் கூடியது. எப்பொழுதுமே தலையை அலசிவிட்டு ஹீட்டர், பேன் போன்ற மின் சாதன பொருட்களை வைத்து காயவைக்க கூடாது. அது நம்ம முடிவளர்ச்சியை பாதிக்கும். சூரியஒளியில் மட்டுமே காயவைக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய் மசாஜ்:
வாரம் இரண்டு முறையாவது ஆயில் மசாஜ் கண்டிப்பாக செய்ய வேண்டும். சுத்தமான செக்கில் அரைத்த தேங்காய் எண்ணையை எடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து காய்ந்தவுடன் அதனுள் தேங்காய் எண்ணெய்யை வைத்து சூடுபடுத்த வேண்டும். பின் மிதமான சூட்டில் தலை முடியை சில பாகங்களாக பிரித்துக் கொண்டு இரண்டு விரல்களாலும் தொட்டு தொட்டு தேய்க்க வேண்டும்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
நம் விரல் நுனியால் நன்றாக தேய்த்து முடியின் வேர்க்கால்களில் படுமாறு மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். முடியின் நுனி வரை தேய்க்கவும். சிரமம் பார்க்காமல், யார் உதவியும் எதிர்பார்க்காமல் தாமாகவே செய்ய முடியும். தொடர்ச்சியாக இம்முறையை பின்பற்றினாலே கூடிய விரைவில் நம் முடிகள் ஊட்டம் பெற்று நன்றாக வளரும் மற்றும் உடல் சூடு தனித்து முகமும் அழகு பெரும்.
ஹேர்பேக் செய்முறை:
நெல்லிக்காய், தேங்காய், செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ, வெந்தயம் ஆகியவற்றை நன்றாக அரைத்து தலையின் வேர்கால்கள் மற்றும் தலை முழுவதும் தேய்த்து ஹேர் கவர் போட்டு மூட வேண்டும். 45 நிமிடம் கழித்து மைல்டு ஷாம்பு அல்லது சீகைக்காய் போட்டு தலையை அலச வேண்டும். அலசிய பின் நாம் செய்யும் மிக பெரிய தவறு தலையில் துண்டை சுற்றிவைப்பது, அவ்வாறு செய்தால் முடி உடைந்து முடி கொட்டுதல் அதிகமாகும்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
மேலே, சேர்க்கப்பட்ட பொருட்களில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. வெந்தயத்தை இரவில் ஊற வைத்து மறுநாள் தயிர் சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்தால் தலை மற்றும் உடல் குளிர்ச்சி அடையும். முடியும் பார்ப்பதற்கு பட்டு போல் இருக்கும். முடியில் வெடிப்பு இருந்தால் மறையும். கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும். மலை காலங்கள் மற்றும் மாலை நேரங்களில் தலைக்கு இந்த ஹேர்பேக் போட கூடாது. ஏனென்றால், வெந்தயம் குளிர்ச்சி தன்மைவாய்ந்தது.