விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கதிர், முல்லை ரொமான்ஸ் சீன் வரவுள்ளது. மேலும் கதிருக்கு முல்லைக்கும் இன்ப அதிர்ச்சியாக முதலிரவும் ஏற்பாடு செய்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
நேற்றைய எபிசோடில் ஜீவா தன் குழந்தையை காண மீனா வீட்டிற்கு செல்கிறார். குழந்தையை பார்த்து விளையாடிக் கொண்டிருக்கும் ஜீவாவை மீனா ஒரு நாள் மட்டும் இங்கே தங்கிக் கொள்ளும்படி கூற ஜீவாவும் தன் அண்ணனிடம் கேட்டு தங்கி கொள்கிறார். இது தெரிந்த ஜீவாவின் அம்மா கோபமடைந்து ஜீவாவை உடனடியாக வரும்படி கூறுகிறார். தனம் எவ்வளவு சொல்லியும் ஜீவாவின் அம்மா கேட்பதாக இல்லை. ஜீவாவிற்கு போன் செய்து வர சொல்கிறார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் மீனா கோவமடைகிறார். மீனாவின் அப்பாவும் தனம் சரியில்லை. முடிந்தவரை அந்த வீட்டை விட்டு வெளியே வர பாருங்க என்று சொல்கிறார். அடுத்ததாக கதிர் முல்லைக்காக பூ, ஸ்வீட் எல்லாம் வாங்கி கொண்டு வருகிறார். வீட்டில் இருப்பவர்கள் என்ன என்று கேட்க கண்ணா புடுங்கி பார்க்க பூ, ஸ்வீட் இருப்பதை பார்த்து அனைவரும் சிரிக்கின்றனர். முல்லையும் வெக்கப்பட்டு செல்கிறார்.
இன்றைய எபிசோடில் முல்லையும், கதிரும் தனியாக அமர்ந்து பேசிக்கொண்டுள்ளனர்.
முல்லை நமக்கு எதுவும் ராசி இல்லை என்று கூற கதிர் இன்னைக்கு வாழ்க்கையை தொடங்கியே ஆக வேண்டும் என கூறுகிறார். ஆனால் முல்லை இன்றும் எதாவது இடைஞ்சல் வரும் தனக்கு இதில் நம்பிக்கை இல்லை என கூற கதிர் வா உள்ளே போகலாம் என்று கூறுகிறார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஆனால் முல்லை கொஞ்ச நேரம் இங்கேயே இருக்கலாம் என்று கூற இப்போ வரலைனா தூக்கிட்டு போயிடுவேன் என்று கதிர் சொல்ல முல்லைக்கு வெக்கம் தாங்கவில்லை. சரி இருவரும் உள்ளே செல்ல போக தனம், மூர்த்தி கதிரை வெளியே படுக்க சொல்கின்றனர். என்ன என்று புரியாமல் கதிரும், முல்லையும் தவித்துக்கொண்டுள்ளனர்.
மேலும் இருவரும் பிரிய மனமின்றி தனியாக படுக்க செல்கின்றனர். அதனிடையே வீட்டில் அனைவரும் முல்லை கதிர் முதலிரவிற்கு நாள், நேரம் குறித்து வைத்துள்ளனர். அதுவரையிலும் இருவருக்கும் இது தெரியாமல் பார்த்துக் கொள்கின்றனர். நாளைய எபிசோடில் கதிர் முல்லைக்கு இன்ப அதிர்ச்சியாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைக்கின்றனர். இதுவரையிலும் அனைவரும் எதிர்பார்த்த கதிர், முல்லை ரொமான்ஸ் சீன் நாளை நமக்காக காத்துக் கொண்டிருக்கிறது.