தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டு தற்போது முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் விசாரணையும் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து குரூப் 1 மற்றும் குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடைபெற்றதாக தற்போது புகார் எழுந்துள்ளது.
கடந்த வருடம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவு தரவரிசை பட்டியலில் முதல் 40 இடத்தைப் பிடித்தவர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள கீழக்கரை தேர்வு மையத்தில் எழுதியவர்கள் என்பது தெரிய வந்தது. ஒரே இடத்தைச் சேர்ந்தவர்கள் முதல் 100 இடங்களுக்குள் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்
இது தொடர்பாக 3 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டு, 2 தாசில்தார்களிடம் விசாரணையானது தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
குரூப் 2A, குரூப் 1,2 தேர்விலும் முறைகேடா..?
இந்த முறைகேடு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் முறைகேடாக வெற்றி பெற்ற பலர் அரசு பணியில் சேர்ந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதால் விரைவில் மேலும் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
முன்பாக 2017 – 2018ம் ஆண்டுகளிலும் குரூப் 2A என்ற நேர்முக தேர்விலும் மற்றும் குரூப் 1,2 தேர்விலும் முறைகேடு நடத்திருக்கக்கூடும் என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. இதில் ஒரு வினாத்தாள் 12 லட்சம் வரை விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |